தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2020, 12:54 PM IST

ETV Bharat / state

‘கரோனா மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதியுங்கள்’ - அன்புமணி ராமதாஸ்

சென்னை : கரோனா மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

mp anbumani ramadoss request to govt to consider siddha treatment for corona patient
mp anbumani ramadoss request to govt to consider siddha treatment for corona patient

கரோனா மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிப்பது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் தொற்றை சித்த மருத்துவத்தின் மூலம் ஐந்து நாள்களில் நலமாக்கி சாதனை படைத்து இருப்பதாகவும், கரோனா மையங்களை தங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தால் குறுகிய காலத்தில் நோயாளிகளை குணப்படுத்திக் காட்டுவதாகவும் சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது அரசு பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனையாகத் தோன்றுகிறது.

தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவத்தில் ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 160 பேரை ஐந்து நாள்களில் நலமாக்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்திருக்கிறார்.

சித்த மருத்துவ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் மொத்தம் மூன்று வகையான சித்த மருந்துக் கலவைகளை உருவாக்கி இருப்பதாகவும், அவற்றை கரோனா தடுப்பு மருந்தாகவும், கரோனாவை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அம்மருந்துகளை பயன்படுத்தியதில் இரு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 160 பேர், புழல் சிறையில் பாதிக்கப்பட்டிருந்த 23 கைதிகள் இதுவரை இல்லாத வகையில் ஐந்து நாட்களில் குணமடைந்துள்ளனர். இது ஒரு மருத்துவ அதிசயம் என்றால் மிகையில்லை.

கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா நோய்க்கு தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் கண்டுபிடித்துள்ள சிகிச்சை முறை நிரூபிக்கப்பட்டது என்பதால் அதைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான மக்களை விரைவாக குணப்படுத்த வேண்டும்.

இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால் உலக அளவில் தமிழர்களின் மருத்துவ முறைக்கு பெரும் புகழும், அங்கீகாரமும் கிடைக்கும்.

எனவே, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தையும் தமிழ்நாடு அரசு இணைத்துக் கொள்ளவேண்டும். அந்த நிறுவனம் கோருவதைப் போல அனைத்து கரோனா மையங்களையும் சித்த மருத்துவத்திற்காக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை.

மாறாக, முதலில் சில ஆயிரம் படுக்கைகளை ஒப்படைக்கலாம். அதன்பின், சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் முன்னேற்றம், நோயாளிகளின் விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

கரோனாவை குணப்படுத்துவதில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்காற்றும் நிலையில் அதைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க :கரோனா வைரசைத் தடுக்க ஹோமியோபதி மருத்துவம்? - முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details