கோயம்பேடு மார்கெட், பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஏராளமான புகார்கள் உள்ளன. இந்நிலையில் நெற்குன்றம் அன்னம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று அதிகாலை அங்கு சென்ற காவல்துறையினர் , சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜேஸ்வரி (58) அவரது மகன் பாலமுருகன்(37) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.