கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து, தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. காவலர்கள் தடை உத்தரவை மீறும் பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 119 நாள்களில், காவல் துறை தடையை மீறியதாக, 8 லட்சத்து 81 ஆயிரத்து 797 பேரைக் கைதுசெய்து ஜாமினில் விடுவித்துள்ளது.
மேலும் 6 லட்சத்து 45 ஆயிரத்து 427 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 18 கோடியே 49 லட்சத்து 66 ஆயிரத்து 251 ரூபாய் வசூலித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கு மீறல்: 119 நாள்களில் சுமார் ரூ.18.5 கோடி அபராதம் வசூல்! - Curfew violation
சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியதாகக் கூறி வாகன ஓட்டிகளிடம் அபராதமாக 18 கோடியே 49 லட்சத்து 66 ஆயிரத்து 251 ரூபாய் வசூலித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு மீறல்