சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சாந்தி நகரில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இதில், 100-க்கும் மேற்பட்ட குடிசைகளில் பலர் வசித்துவருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள முனியப்பன் என்பவருக்குச் சொந்தமான குடிசை வீட்டில் மின்கசிந்துள்ளது. அப்போது, ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இதனால், அருகிலிருந்த 10-க்கும் மேற்பட்ட குடிசைகளில் தீ பரவியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.