தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அதிக மழை பெய்துள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் செப்டம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமான மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

More rain this year in tamilnadu chennai weather research center announced

By

Published : Sep 27, 2019, 4:38 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்துள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 38செ.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 33செ.மீ. இயல்பான அளவைவிட16 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை பதிவான மழையின் அளவு 59 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 42 செ.மீ. இயல்பைவிட 39 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிக மழை வானிலை மையம் அறிவிப்பு

குறிப்பாக செப்டம்பர் மாதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இன்றுவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 16 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 10 செ.மீ ஆகும்.

தெற்கு ஆசிய நாடுகளுக்கான வட கிழக்கு பருவ மழைக்கான முன் அறிவிப்பின்படி இந்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மழையின் அளவு இயல்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details