சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிறுவனத் தலைவர் சேதுராமன், "அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் அதிக அளவில் தங்களின் அமைப்பு உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் நிர்வாகிகள் உள்ளதால், அதிமுகவின் வெற்றிக்கு அனைத்து தொகுதிகளிலும் பாடுபடுவோம். மூன்று தொகுதிகளிலும் அதிமுக சின்னமான இரட்டை இலையில் போட்டியிடுவது என தெரிவித்துள்ளோம்" எனக் கூறினார்.