சென்னை: வருகிற உள்ளாட்சித் தேர்தலுக்கான மாநிலத் தலைமைப் பணிக் குழு மற்றும் மாவட்ட வேட்பாளர் தேர்வுக் குழுவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ம.நீ.ம-வின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, தங்களது ஜனநாயகக் கடமையினைச் செவ்வனே தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர். கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும் ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த `ஏரியா சபை’ போன்ற அமைப்புகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம் என கமல்ஹாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.