தமிழ்நாட்டில் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் செய்ய இருக்கும் தனது தேர்தல் பரப்புரை அட்டவணையை வெளியிட்டுள்ளார்.