சென்னை:2019 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியைச் சேர்ந்த தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், துணைத் தலைவர் பூச்சி முருகன், மனோபாலா, கோவை சரளா, நடிகை லதா உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.