திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், “மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மிகவும் காலதாமதமாக இப்போது அரசு ஆணை வெளியிட்டிருக்கிறது. சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசிடம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமையைப் போராடிப் பெற வேண்டிய அவல நிலைமை தொடர்கிறது.
இந்த உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட திமுக சார்பில் குரல் எழுப்பிய பிறகே அதற்கு ஒப்புதல் தெரிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உள் இடஒதுக்கீடு விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் செயல்படுத்தப்படாது என்ற அரசின் முடிவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.