துபாயில் நடந்த 2019ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் சென்னையைச் சேர்ந்த அக்ஷரா ரெட்டி இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு உலக அழகி பட்டம் வென்றார். பட்டம் வென்று சொந்த ஊர் திரும்பிய அக்ஷராவிற்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியா சார்பாக ஏதாவதொரு போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது என்னுடை கனவு. அந்தக்கனவு தற்போது நிறைவேறியுள்ளது. ஜப்பான், ரஷ்யா, ஜிம்பாப்வே ஆகிய 22 நாடுகளில் இருந்து அழகிகள் துபாயில் நடந்த அழகிப்போட்டியில் கலந்துகொண்டனர்.