நோய்த் தொற்று மற்றும் டெங்கு பரவாமல் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், அதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
" மழை பெய்யும் போதெல்லாம் தொற்று நோய் பரவுவது இயல்பு, அதனைத் தடுக்க உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேர் டெங்கு ஒழிப்பு பணிகளிலும், 66 ஆயிரம் பேர் தொற்று நோய் தடுப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஐந்தாயிரத்து 890 பெரிய புகை பரப்பு இயந்திரங்கள் மற்றும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறிய ரக புகை பரப்பு இயந்திரங்கள் டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.