எலியட்ஸ் அருங்காட்சியகத்தில் கண் மருத்துவமனை துவக்கப்பட்ட பொழுது பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கருவிகள், மருத்துவ உபகரணங்களின் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண் அறுவை சிகிச்சை கருவிகள், அவர்கள் பயன்படுத்திய மேசை, நாற்காலிகள், கண்களின் செயற்கை வடிவமைப்புகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் 200ஆம் ஆண்டு நினைவு விழா மலரை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் 200-வது நினைவு ஆண்டில் சிறப்பம்சமாக 66 கோடி மதிப்பீட்டில் அதிநவீன கட்டடம் கட்டப்படவுள்ளது. இங்கு அமைந்துள்ள அருங்காட்சியகம் நல்ல முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் மருத்துவ சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்.