தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 27, 2022, 7:05 AM IST

ETV Bharat / state

கொரிய நாட்டின் சிவில் பொறியியல் குழுவினருடன் அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

கொரிய நாட்டின் முன்னணி சிவில் பொறியியல் குழுவினருடன் அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கொரிய நாட்டின் சிவில் பொறியியல் ஆலோசனை கழக குழுவினருடன் அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு
கொரிய நாட்டின் சிவில் பொறியியல் ஆலோசனை கழக குழுவினருடன் அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (26.9.2022) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவை, கொரிய நாட்டின் முன்னணி சிவில் பொறியியல் குழுவினர், கொரியா இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் கார்ப்பரேஷன் (கேஇசிசி) ஆலோசகர் ஜயாங் இம் தலைமையில் சந்தித்து பொறியியல் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

தற்போது, கொரியாவில் நடைமுறையில் உள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, விரைவாகவும், எளிதாகவும் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், இதுவரை பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் தொடங்கவுள்ள பல்வேறு சிவில் பொறியியல் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசகன் கொரியா சங்மோ ஜெனரல் கன்ஸ்ட்ரக்ஷன் தலைமை செயல் அலுவலர் ஜயாங் ஜியோங், கொரியா டேடோ என்டெக் தலைமை செயல் அலுவலர் ஜங் சூ சாங், அபுதாபியை சேர்ந்த கொரியா இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாகிகள் முகமது சஹீத், முகமது ரஃபி மற்றும் இந்தியாவை சேர்ந்த ராஜ்குமார், மராட்டி ரவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:விண்கல்லில் மோதும் விண்கலம்... நேரடி ஒளிபரப்பு செய்யும் நாசா...

ABOUT THE AUTHOR

...view details