சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்.6 ஆம் தேதி தொடங்கியது. இதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் நான்காவது நாளான இன்று (ஏப்.11) உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பதிலுரை நிகழ்த்துகின்றனர். சட்டப்பேரவை தொடக்கியபோது கேள்வி நேரத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவைக் குழு தலைவர் ஜி.கே.மணி, உலகின் ஆதி இசை தமிழ் இசை, ஒவ்வொரு மாவட்டத்திற்கு இசை பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இதன் மூலம் தமிழ் இசை உலகம் முழுவதும் சென்றடையும் எனப் பென்னாகரம் தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினர்.