தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆழ்கடல் ஆய்வுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் தங்கம் தென்னரசு - cm mk stalin

கடல் கடந்து இருக்கக்கூடிய தொடர்புகளை அகழாய்வின் மூலம் அறியும் வகையில் ஆழ்கடல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

thangam thennarasu
thangam thennarasu

By

Published : Sep 9, 2021, 5:41 PM IST

Updated : Sep 9, 2021, 6:54 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகம் நடத்தப்படும், தமிழின் வேர் தேடி இந்திய அளவிலும், உலக அளவிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ”110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பு தமிழ் மொழியின் வரலாற்றில் மிகவும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. தமிழர் நாகரிகத்தில் உள்ள தொன்மையை இப்போது இருக்கக்கூடிய காலங்களுக்கு மிக முன்னதாக எடுத்துச் செல்லக்கூடிய அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகள் வெளிவந்து இருக்கக் கூடிய நிலையில்;

அவற்றை சட்டப்பேரவையில் வெளியிட்டு தமிழின் தொன்மையும் 3700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அமைந்திருக்கிறது என்கின்ற உண்மையை அறிவியல பூர்வமாக நிரூபிக்கும் விதமாக முதலமைச்சரின் அறிவிப்பு இருக்கிறது.

கால கணக்கீடுகளின் அடிப்படையில் 1200 வருடங்களுக்கு முன்பாக தமிழரின் நாகரிகம் இருந்தது என்பது இந்த அகழாய்வு மூலம் அறியப்பட்டுள்ளது. 13 எழுத்துக்கள் கொண்ட சொற்றொடர் கீழடியில் கிடைக்கப்பெற்ற பானை ஓடுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் ஆய்வு

கடல் கடந்து இருக்கக்கூடிய தொடர்புகளை அகழாய்வின் மூலம் அறிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆழ்கடல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 1991 அன்று பூம்புகார் கடல் ஆய்வுக்கு கருணாநிதி முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆதிச்ச நல்லூரில் இந்திய தொல்பொருள் நிலையம் சார்பில் கடந்த ஆட்சி காலத்தில் தொல்பொருள் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் தொல்பொருள் நிலையம் வாழ்விடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

திருநெல்வேலியில் தற்பொழுது அமைக்கப்படும் அருங்காட்சியகம் பொருநை நகரத்தை உள்ளடக்கியது மட்டுமே. தமிழ் பண்பாட்டை அறியக்கூடிய நாகரிகம். தமிழ் மொழிக்கு சிறப்பு வரக்கூடிய காலகட்டத்தில் திராவிடம் ஆட்சியில் இருக்கும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

அகழாய்வுகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகள் அனைத்தும் அறிவியல் ஆராய்ச்சிபடி மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியச் சான்றுகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள முடிவுகள் அல்ல.

தமிழ்நாட்டில் நூறுக்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள், அரண்மனைகள், கோட்டைகள் பல்வேறு சிற்ப தொழில் அமைக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் சின்னங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்றார்.

Last Updated : Sep 9, 2021, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details