தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுக்கூடங்கள் கண்டிப்பாக செயல்படக்கூடாது: அமைச்சர் செந்தில் பாலாஜி - சென்னை மாவட்ட செய்திகள்

அரசு அனுமதி வழங்கும் வரை மதுக்கூடங்கள் கண்டிப்பாக செயல்படக்கூடாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Oct 20, 2021, 8:27 PM IST

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து முதுநிலைமண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்.

அப்போது பேசிய அவர், "டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் அனுமதிக்கப்பட்ட பணிநேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும். மதுபானங்கள் அனைத்தும் மதுபானக் கடைகளில் மட்டுமே விற்கப்பட வேண்டும்.

கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது

சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் அல்லது மற்ற பெட்டிக் கடைகளில் விற்கப்படுகிறதா என கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.

அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது மதுக்கூடங்கள் செயல்பட அரசால் அனுமதி வழங்கப்படவில்லை.

மதுக்கூடங்கள் கண்டிப்பாக செயல்படக்கூடாது

அரசு அனுமதி அளிக்கும் வரை மதுக்கூடங்கள் கண்டிப்பாக செயல்படக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க:பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு காவல் துறை சலுகை?

ABOUT THE AUTHOR

...view details