தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2022, 11:01 PM IST

ETV Bharat / state

மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 60 நாள்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை:தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏற்கெனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் மின் புதைவட கம்பிகள் பதிக்கும் பணி இரண்டு மண்டலங்களில் முடிவுற்று உள்ளதாக தெரிவித்தார்.

வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாவது அலகு 800 மெகாவாட் திட்டம் டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என்று கூறினார். எண்ணூரில் இரண்டு மற்றும் மூன்றாவது அலகு ஆயிரத்து 320 மெகாவாட் திட்டமானது 2024ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதத்தில் முடிக்கத்திட்டமிட்டு உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

உப்பூர் மற்றும் உடன்குடி மின் திட்டங்களை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகளில் 6ஆயிரத்து 220 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி விளையாட்டு: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை தாக்கல் - விரைவில் அவசரச் சட்டம் ?

ABOUT THE AUTHOR

...view details