தமிழ்நாடு மின் ஆளுமை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் ஆளுமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி இல்லந்தோறும் இணையம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் அனைத்து நகரம், மற்றும் கிராம பஞ்சாயத்திலும் அதிவேக இணைய சேவை வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசிடமிருந்து நிதி உதவியை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.