திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில், "கோவிட்-19 கொடிய நோய்த்தொற்றைத் தடுப்பதில் படுதோல்வியடைந்து, கரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று இயலாமையால் கைவிரித்து நிற்கும் முதலமைச்சர் பழனிசாமி ஜூன் 19ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது பின்பற்றி, தமிழ்நாடு மக்களை கரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்திட முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபடும் அரசின் மீது பழிபோடுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.