தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2022, 5:32 PM IST

ETV Bharat / state

கல்லூரி விரிவுரையாளர் பணி: முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கிடையாது - அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள 4,000 இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு கிடையாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: பொறியியல் படிப்பிற்கான 4 ஆம் சுற்று கலந்தாய்வின் நிலவரங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவ. 8) வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடைபெறும் நான்கு சுற்று கலந்தாய்வில் 3 ஆம் சுற்று கலந்தாய்வு முடிந்துள்ளது.

தற்போது 4 ஆவது சுற்று கலந்தாய்வு வரும் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3 சுற்று கலந்தாய்வு முடிவுகளில் 89,585 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 10,000-ம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். துணைக் கலந்தாய்வின் போது குறிப்பிட்ட கல்லூரிகளில் விதிகளை மீறி உதவித் தொகைக்காக மாணவர்களை சேர்த்தது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள 4,000 இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு கிடையாது.

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கல்லூரி பேராசிரியர்களுக்கு இடமாற்றம் குறித்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. 5,408 பேர் இடமாற்றம் பெற தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். 3,000 இடங்களுக்கு இடமாறுதல் பெற்று கொள்ளலாம். பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்படும். இந்த கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பாடங்களை தமிழ் வழியில் மொழி பெயர்க்க தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கருணை அடிப்படையில் பணி.. அரசு விடுத்த வார்னிங்!

ABOUT THE AUTHOR

...view details