சென்னை:பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் 60,646.43 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டது, ஆனால் 21 மாத காலத்திலேயே திமுக ஆட்சியில் 20,653.56 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கரும்பு கொள்முதல் விலை தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் அறிக்கைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பனின் அளித்துள்ளார்.
செங்கரும்பு கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாகவும், மாநிலம் முழுதும், அதிகாரிகளும், இடைத்தரகர்களும், ஒரு கரும்புக்கு, 15 ரூபாய் முதல், 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், இதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழக்கம்போல், திமுக அரசைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கரும்பு கொள்முதல் பற்றி உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்து நான்கு பொங்கல் விழாக்களைக் கொண்டாடி இருக்கிறார். அப்போது கரும்பு வழங்கிட வெளியிட்ட அரசாணைகளை முழுமையாகப் படிக்காவிட்டாலும், அவற்றின் சாராம்சத்தையாவது தெரிந்து கொண்டோ அல்லது திமுக அரசு வெளியிட்ட அரசாணையாவது படித்திருந்தோ அல்லது படித்தவர்களிடம் தெரிந்து கொண்டோ இருந்திருக்கலாம்.
எதையும் படிக்காமல் தெரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டைக் கூறுவது முன்னாள் முதலமைச்சருக்கும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முதல்வராயிருந்த 2021 பொங்கலுக்கு கரும்பு ரூ.30 வழங்க ஆணையிடப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியுமா? எதையுமே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடலாமா?
இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022 கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம்பெற்ற முழு நீளக் கரும்பிற்கு அரசால் ரூ.33 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது முந்தைய அதிமுக அரசு அறிவித்த ஒரு கரும்பின் கொள்முதல் விலையான ரூ.30-ஐ விட 10 சதவீதம் அதிகமாகும்.