சென்னை ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்டதிருவேற்காடு பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிகார் மாநிலத்தில் எந்த நாளில் தேர்தல் நடக்க வேண்டுமோ அந்த நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே 23ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும். இன்னும் எட்டு மாதத்திற்குள் கரோனா இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.
தேர்தல் தள்ளிவைப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகள் இல்லை என நான் நினைக்கிறேன். கண்டிப்பாக தேர்தல் நடக்கும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி மலர்ந்தது என்ற செய்தி தெரியும்" என்றார்.