தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரப்பதிவுகளில் கூடுதல் தொகை வாங்கினால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை! - சைதாப்பேட்டை

அனைத்து பத்திரப்பதிவுகளிலும் அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் தொகையை வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

வணிகவரித்துறை அமைச்சர்
வணிகவரித்துறை அமைச்சர்

By

Published : Jul 6, 2021, 2:41 PM IST

சென்னை:சைதாப்பேட்டையிலுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரோனா காலத்திலும் பத்திரப்பதிவு எப்போதும்போல நடைபெறுகிறது. ஒருதலைபட்சமாக பத்திரப்பதிவு செய்யும் அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரப்பதிவுக்கு அரசு நிர்ணயித்த தொகையை தவிர கூடுதல் கட்டணத்தை வாங்கக்கூடாது என்று ஏற்கனவே கூறியுள்ளோம். அதனை மீறும் அலுவலர்கள மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் எண் அறிவிப்பு:

கடந்த ஆட்சி காலத்தில் அனுமதி பெறாமல்கூட பத்திரப்பதிவு நடந்திருக்கிறது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க சில மாற்றங்கள் செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள பத்திரப்பதிவு அலுவலர்கள் குறித்து புகார் அளிக்க 9498452110 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்” என்றார்.

இதையும் படிங்க: சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது மோசடி புகார்!

ABOUT THE AUTHOR

...view details