தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆணைப்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று (மே.16) சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண தொகை வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் உதவும் வகையிலும் ரூ. 4,153.39 கோடி செலவில், மே மாதம் முதல் தவணையாக ரூ. 2,000 கரோனா நிவாரண உதவித் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
கரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் - relief for ration card beneficiaries
சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
![கரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் minister Ma Subramanian gives relief](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11778905-thumbnail-3x2-biggboss.jpg)
minister Ma Subramanian gives relief
அதன் அடிப்படையில் இன்று கோட்டூர்புரத்தில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தால் (டி.யு.சி. நிறுவனத்தால்) நடத்தப்படும் நியாய விலைக் கடையில் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் வாகனங்கள் பறிமுதல்!