தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையோர உணவகத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர்...! - Minister Jayakumar Collecting Votes In Rayapuram Constituency

சென்னை: ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் சாலையோர உணவகத்தில் உணவருந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை ராயபுரம் ஜெயக்குமார்  அமைச்சர் ஜெயக்குமார்  ராயபுரம் தொகுதி  அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு  அமைச்சர் ஜெயக்குமார் இட்லி  Minister Jayakumar  Minister Jayakumar Collecting Votes In Rayapuram Constituency  Minister Jayakumar Eating at a roadside restaurant
Minister Jayakumar Eating at a roadside restaurant

By

Published : Mar 23, 2021, 11:37 AM IST

தமிழ்நாடு தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கும் சூழலில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் தற்போதைய அமைச்சர் ஜெயக்குமார் தனது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று (மார்ச்.22) ராயபுரம் தொகுதியில் எம்சி ரோடு உள்ளிட்ட பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் சைக்கிள் ரிக்ஷா மூலம் சிறிய தெருக்களில் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

சாலையோர உணவகத்தில் உணவவருந்தும் அமைச்சர் ஜெயக்குமார்

இதையடுத்து, ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அந்த குறைகளை சரி செய்வதாக வாக்குறுதி அளித்தார் பின்னர் சாலையோரத்தில் இட்லி விற்கும் பெண்மணியிடம் இட்லி வாங்கி சாப்பிட்டார். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க:’நான் வெற்றி பெறவேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார்’ - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details