சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற CSI பெண்கள் பேரவை மாநாட்டில்
சமூக நல மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "CSI பேரவை பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதரவற்றோர் இல்லம், திருமணப்பதிவு மையம் உள்ளிட்டப்பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். மேலும் பெண்கள் விடுதியில் சமூக நலத்துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
குறிப்பாக தரமணி, தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தனியார் பெண்கள் விடுதியில் உணவு மற்றும் பாதுகாப்பு முறையாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அறிவுறுத்த இருக்கிறோம்.