தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1500 பேருக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை! - சென்னை செய்திகள்

தமிழ்மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் வெற்றி பெற்ற 1500 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 2, 2022, 2:14 PM IST

சென்னை:தலைமை செயலகத்தில் தமிழ்மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் வெற்றி பெற்ற 1500 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் ஊக்கத்தொகை குறித்து அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று (டிச.1) நடந்தது. அப்போது முதலில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 'தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது.

மாதம் ரூ.1500:இதில், அரசுப்பள்ளி மாணவர்கள் 1,18,057 பேர், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 54,247 பேர், தனியார் பள்ளி மாணவர்கள் 78,400 பேர் என மொத்தம் 2,50,731 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 967 பேருக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 123 பேருக்கும், தனியார் பள்ளி மாணவர்கள் 410 பேருக்கும் என 1500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கவுள்ளோம்.

தேர்வு முடிவுகள்:அரசுத் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தை சேர்ந்த அபிநயா 100/97 மதிப்பெண் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அதிகமாக மாணவிகளே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

கோரிக்கை: சமீபத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பார்வையிட்டபோது அங்குள்ள பணியாளர்களே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதே போன்று, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்க முன் வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளேன்.

இதன் மூலம், மாணவர்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்க முடியும் எனக் கூறியதாகவும், இதுகுறித்து மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர்.

பேராசிரியர் அன்பழகன் சிலை:சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக, அந்தப் பள்ளியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இன்னும் பதில் வரவில்லை என தெரிவித்தார். அனைவருடன் இணைந்து பழகக் கூடிய பேராசிரியர் அன்பழகன் சிலையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் வைப்பதில் எந்தவித எதிர்ப்பும் இல்லை' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'ஆதிச்சநல்லூர், பொருநை, கீழடி தமிழின் பாரம்பரியத்தை பள்ளி மாணவர்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் பாடப்புத்தகத்தில் சேர்த்து வருகிறோம். வரும் கல்லாண்டுகளில் தமிழ் மொழி இலக்கியத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்வோம்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாளிகைமேடு அகழ்வாராய்ச்சின் பணிகள்... முதலமைச்சர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details