சென்னை: 14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகள், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் உறவுக்கார இளைஞன் சதீஷ்குமார் தவறாக நடந்து கொண்டதும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட இளைஞர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியபட்டுள்ள நிலையில், கர்ப்பத்தை தொடர்ந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருக்கலைப்பு சட்டக் குழு அறிக்கை அளித்துள்ளது.
இதையும் படிங்க:’இன்று பில்கிஸ் பானோ.. நாளை..?’ - உச்ச நீதிமன்றம் அதிருப்தி