தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஐடி மாணவர்களின் மாட்டிறைச்சி போராட்டம்: போலீசாருக்கு எதிரான மனு மீது பரபரப்பு உத்தரவு - iit student issue on beef

ஐஐடி மாணவர்களின் மாட்டுகறி விவகாரம் தொடர்பான போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

ஐஐடி மாணவர்களின் மாட்டுக்கறி விவகாரம் வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்
ஐஐடி மாணவர்களின் மாட்டுக்கறி விவகாரம் வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Jun 13, 2023, 4:10 PM IST

சென்னை:மாட்டுக்கறி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய சென்னை ஐஐடி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறைச்சிக்காக கால்நடைகளின் பயன்பாடு குறித்து மத்திய அரசு பல்வேறு புதிய சில அறிவிப்பினை வெளியிட்டது.

நாடெங்கும் இறைச்சிக்காக மாடுகள் அதிகளவில் விற்கப்படுவதனை தவிர்க்கும் விதத்திலும் இந்த அறிவிப்புகள் வெளியாகின. இந்த அறிவிப்பிற்கு நாடெங்கும் பல்வேறு தரப்பு மக்களிடையே கண்டனங்கள் வலுப்பெற்றது. இதனை எதிர்க்கும் நோக்கத்தில் சென்னை ஐஐடி வளாகத்தினுள் மாட்டுகறி உண்ணும் விழாவினை 2017ம் ஆண்டு மே மாதத்தில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

அம்பேத்கர் வாசகர் வட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவிற்கு ஏபிவிபி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வளாகத்தினுள் இவர்களிடையே ஏற்பட்ட மோதலால் மாணவர் ஒருவர் காயமடைந்தார். இதனை கண்டிக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் 2017 மே 30ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் விதத்தில் கல்லூரி தனிக்குழு அமைத்து விசாரணையை மேற்கொண்டது.

இதையும் படிங்க:Video Leaked: கோர்ட் முன்பு மனைவியை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி.. தேனியில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!

சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது, பாஜக-வின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியச் சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஐஐடி மாணவர்களை காவல் துறையினர் தாக்கியதாகவும், அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குழு அமைக்கும்படி உத்தரவிடக் கோரி டிட்டி மேத்யூ என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஜூன் 13) விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, மாணவர்கள் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஐஐடி மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பம் வில்லை எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:Shakeel Akhtar: தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details