தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு: உள்துறை செயலாளர், டிஜிபி விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணை! - மூத்த வழக்கறிஞர் ஜி ராஜகோபாலன்

RSS procession in TamilNadu: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும், காவல்துறை அனுமதி மறுத்தது அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிகாட்டுவதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க விரும்பாததையே காட்டுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நான்கு வாரங்களில் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மறுப்பு
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மறுப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 6:17 PM IST

சென்னை:நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி, அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழ்நாட்டில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். மாவட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு கடந்த அக்டோபர் 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதிக்கவில்லை எனறுக் கூறி தமிழ்நாடு காவல்துறை மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு இன்று (நவ.1) நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகினார். தொடர்ந்து பேசிய அவர், "நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழ்நாட்டில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, " இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நாளை மறுநாள் (நவ.03) விசாரணைக்கு வர உள்ளது. அதனால் அதுவரை கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, இரு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது, அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிகாட்டுகின்றது. மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க விரும்பாததையே இது வெளிபடுத்துகின்றது" என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குறித்து உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு நான்கு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:"ஆளுநரின் அதிகாரத்தை பறிக்க தமிழக அரசு 12 மசோதாக்கள் நிறைவேற்றம்" - அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details