தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியர் தேர்வுகள் நடத்திய விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம்! - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை நடத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வதற்கு மாநில அரசுக்கு நான்கு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Feb 4, 2021, 9:37 PM IST

Updated : Feb 4, 2021, 10:22 PM IST

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இவ்வழக்குகள் நிலுவையில் இருந்த போது, பல பல்கலைக்கழகங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டதாகவும், அதற்குத் தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்தன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்-லைன் அல்லது ஆஃப்-லைன் மூலம் அரியர் தேர்வுகளை நடத்தி, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இவ்வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கரோனா சூழல் தணிந்து தற்போது தான் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், அரியர் தேர்வுகள் நடத்தியது குறித்து பல்கலைக்கழகங்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், நான்கு வார காலம் அவகாசம் வழங்கி, இவ்வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பொறியியல் கல்லூரி ஆசிரியர் சம்பள விவகாரம் - உயர்கல்வித் துறை செயலாளருக்குச் சம்மன்!

Last Updated : Feb 4, 2021, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details