தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் - அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு - Birthday Celebration of MGR, Chennai

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

By

Published : Jan 17, 2020, 4:43 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதைசெலுத்தினர்.

பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

இதையும் படிங்க:திருச்சியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா: கோலாகல கொண்டாட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details