தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN Weather: 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - நெல்லை தருமபுரி தேனியில் கனமழை பெய்யும்

நெல்லை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை (ஏப்ரல் 23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

MET forecasting
வானிலை அறிக்கை

By

Published : Apr 22, 2023, 3:00 PM IST

சென்னை:வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்.22) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.23) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 24, 25 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஏப்ரல் 26ம் தேதி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.22) அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் போடிநாயக்கனூர் (தேனி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை PTO-ல் (கோயம்புத்தூர்) தலா 4 செ.மீ, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாலவிதிதி (கரூர்), சின்கோனாவில் (கோயம்புத்தூர்) தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

சோர்வை தரலாம்: அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் போது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க: 40 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி - அமைச்சர் அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details