மெரினா கடற்கரையில் பலர் சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். கரோனா ஊரடங்கால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கடற்கரையை அழகுப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்காக அங்குள்ள கடைகள் முழுவதும் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வியாபாரிகள் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் அக்னி கோத்ரி தலைமையிலான தனிக் குழு மெரினா கடற்கரையில் 900 கடைகளை மாநகராட்சி அமைத்து தர வேண்டும் என உத்தரவிட்டது.