சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பெட்டி கடைகள் நடத்தி வரும் சிறு வியாபாரிகள் காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், "திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராகப் பணியாற்றிவரும் மணிமாறன் என்பவர் தினமும் சிறு வியாபாரிகளிடம் போதைப் பொருள் விற்பதாகக் கூறி அறிக்கை அனுப்பி கடையை மூடிவிடுவேன் என்று மிரட்டி மாதம் ஆயிரம் ரூபாய் மாமூல் வசூல் செய்து வருகின்றார்.
மாமூல் வசூல்
இதுமட்டுமில்லாமல் பாஸ்போர்ட் ஆய்விற்காக போது சம்மந்தப்பட்ட நபர் வீட்டிற்குச் சென்று மிரட்டி 5 ஆயிரம் ரூபாய் மாமூல் வசூலிக்கிறார். மேலும் கல்லறை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வரும் அருப்பு லட்சுமி, காஞ்சனா ஆகியோரிடமும் மாமூல் வாங்கி கொண்டு கண்டும் காணாமல் போய்விடுகின்றார். இதேபோல், திருவல்லிக்கேணியில் விடுதியில் தங்கி குருவியாகச் செயல்படும் நபர்களை கண்டறிந்து அவர்களிடமும் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றார்.
நடவடிக்கை