காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (23). இவர் மதுரவாயலில் உள்ள ஹைடெக் ஜிஆர்சி மார்பிள் கம்பெனியில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், கோட்டூர்புரம் ஐஐடி வளாகத்தில் நடக்கும் கட்டட பணிக்காக நேற்று (பிப்.15) மாலை மார்பிள் கற்களை இறக்க விஜய், லாரியில் சென்றார்.
பின்னர், ஐஐடி வளாகத்தில் உள்ள மின் அறிவியல் துறை கட்டடம் அருகே மார்பிள் கற்களை இறக்க ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். அப்போது, லாரியிலிருந்து கீழே இறங்கிய விஜய் லாரியில் உள்ள கற்களை இறக்க சென்றார். இதனை கவனிக்காத லாரி ஓட்டுநர் மாரியப்பன், லாரியை பின்பக்கமாக மண் மேட்டில் ஏற்றியதில் மார்பிள் கற்கள் சரிந்து விஜய் மீது விழுந்தன.