புதுச்சேரியில் உள்ள ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீவெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை தலா 55 இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கின.
இதுகுறித்த அறிவிப்பை ரத்து செய்து, இந்தக் கல்லூரிகளில் உள்ள தலா 150 இடங்களில், 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி, அபிராமி, ஸ்வேதா உள்ளிட்ட ஏழு மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த மனுவில், கடந்த 2006ஆம் ஆண்டின் மாணவர் சேர்க்கை விதிகளின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என குறிப்பிட்டனர்.
இவ்வழக்குத் தொடர்பாக பதிலளித்த புதுச்சேரி அரசு, புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 50 விழுக்காடு இடங்களை வழங்க மறுத்துள்ளதாகவும், அதனால் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது.