தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்கதரிசி சிட் பண்ட் நிறுவனத்திற்கு விருது! - மர்கதரசி சைலஜா கிரோன்

சென்னை: சிட்பண்ட் துறையில் ஆண்டுக்கு 11ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் முதல் ஈட்டி சாதனை படைத்த மார்கதரிசி சிட் பண்ட் நிறுவனத்திற்கு ஆடிட்டர் குருமூர்த்தி விருது வழங்கினார்.

margadarasi-chitfund-getting-award-from-auditor-guru-moorthy

By

Published : Sep 28, 2019, 4:03 PM IST

Updated : Sep 28, 2019, 5:26 PM IST

அகில இந்திய சிட்பண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மெட்ராஸ் மேலாண்மை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

ரிசர்வ் வங்கி நிர்வாக வாரியத்தின் இயக்குனர்களில் ஒருவரான எஸ்.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிட் பண்ட் துறையை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்று விரிவாக விவாதிக்கப்பட்டது.

மர்கதரசி சிட்பண்ட் நிறுவனத்திற்கு விருது

இந்த துறையில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் முக்கிய பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இதனை அடுத்து சிட் பண்ட் துறையில், ஆண்டுக்கு 11 ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் விற்று முதல் ஈட்டி சாதனை படைத்த மர்கதரிசி சிட் பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரணுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி விருது வழங்கி கௌரவித்தார்.

மார்கதரிசி சிட் பண்ட் நிறுவனத்தின் இயக்குநர் சைலஜா கிரண்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலஜா கிரண், "இந்த விருது கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது, இது மேலும் உழைக்க உத்வேகம் தருகிறது. மக்களுக்கு நிதி சேவையை வழங்கிவரும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதில்லை.

அதே நேரத்தில் சிட் பண்ட் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் 12விழுக்காடு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:IBC 2019 Innovation Award: சர்வதேச அளவில் ஈடிவி பாரத்துக்கு அங்கீகாரம்!

Last Updated : Sep 28, 2019, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details