தமிழ்நாடு

tamil nadu

நடிகை த்ரிஷா குறித்து சர்சைக்குரிய கருத்து! மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 10:14 PM IST

Mansoor Ali Khan: த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Mansoor Ali Khan
த்ரிஷா குறித்து சர்சைக்குரிய கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை: தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வில்லனாக நடித்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிகைகளை வில்லன் பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகள் அதிகம் இருக்கும். இப்போது அது குறைந்து விட்டது. அந்த வில்லன் காட்சிகள் லியோ திரைப்படத்தில் த்ரிஷாவுடன் இருக்கும் என்று விரும்பினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை" என்றார். இவரது இந்த பேச்சு தற்போது சர்சையாகி விட்டது.

இது குறித்து த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில், "மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசும் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாலியல் ரீதியாகவும், ஆணாதிக்க மனநிலையும், பெண்களை அவமரியாதை செய்யும் விதமாகவும், பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசும் வீடியோ மோசமாக இருக்கிறது.

மேலும், அவர் என்னுடன் திரையில் நடிக்க விரும்பலாம். ஆனால் நான் இதுவரை இது போன்ற ஒரு நபருடன் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு மேலும் எனது திரை வாழ்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். இவர்களை போன்றவர்களால் தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு அவப்பெயர்" என தனது கண்டனத்தைப் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து ஐபிசி பிரிவு 509(பி) என்ற சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது. மேலும், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் மீது 354a, (பெண்களை தரைக் குறைவாக பேசுதல்), 309 (தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மேற்கு வங்கம் பிராண்ட் அம்பாசிடராக சவுரவ் கங்குலி நியமனம் - முதலமைச்சர் மம்தா அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details

தொடர்புடைய கட்டுரைகள்