தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 11, 2022, 10:45 PM IST

ETV Bharat / state

மெரினா கடற்கரை சாலையில் கொலை - 2 பேர் கைது

முன்விரோதம் காரணமாக, குடிபோதையில் இருந்த நபரை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கைது
கைது

சென்னை:சென்னை மெரினா கடற்கரை சாலையில், கண்ணகி சிலை அருகில் நேற்று காலை(10-4-2022) நடைபாதையில் அடையாளம் தெரியாத நபர் தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்த நபர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பச்சையப்பன்(46) என்பதும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இவர் மீது செல்போன் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பச்சையப்பன் மது அருந்தி விட்டு, போதையில் மெரினா கடற்கரைக்குச்சென்றபோது, அங்கிருந்த இருவர் அவரை அடித்து உதைத்து, பிறகு நடைமேடையில் பச்சையப்பன் தலையை மோதி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

அதன்படி, விசாரணை நடத்திய போலீசார், கொலைக்கு காரணமான, திருப்பத்தூரை சேர்ந்த ஜமீல் அகமது, பெரும்பாக்கத்தைச் சுஜி ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யபட்ட நபர்களுக்கும், பச்சையப்பனுக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாகவும், அதன் காரணமாகவே கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இருளர் இன மக்கள் வீட்டு மனை பட்டா வழக்கில் ஆட்சியருக்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details