தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 13, 2019, 12:50 PM IST

ETV Bharat / state

கோயிலுக்கு மாலை அணிந்தால் மது அருந்த முடியாது: விரக்தியில் தொழிலதிபர் தற்கொலை!

சென்னை: ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தால் மது அருந்த முடியாது என்ற விரக்தியில் தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டார்.

மது அருந்த முடியாத விரக்தியில் தொழைலதிபர் தற்கொலை

சென்னை மேற்கு மாம்பலம் காந்திபுரம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(35). இவரது சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் ஏற்காடு. சென்னை மாம்பலத்தில் கல், மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விற்பனை செய்துவருகிறார்.

அதிக மது பழக்கம் உள்ள கணேசனை, கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மாலை அணிந்தால் மது அருந்த முடியது என்ற விரக்தியில் குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்ற நேரம் பார்த்து கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த மாம்பலம் காவல் துறையினர் கணேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : காதல் மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details