சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதியும், காவலர்கள் நல வாரியத்தின் தலைவராdன சி.டி. செல்வத்தின் பாதுகாவலராக பணியாற்றி வருபவர் சக்திவேல், ஆயுதப்படை காவலரான இவர் நேற்று முன்தினம் (மார்ச்.22) காலை நீதிபதியுடன் காரில் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அசோக் நகர் சிக்னல் அருகே வரும் போது காரின் முன்பு திடீரென மூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் ஒன்று நின்றது.
இதனையடுத்து, உடனே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சக்திவேல் கீழே இறங்கி சாலையில் நின்ற இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்த மூவர் காவலர் சக்திவேலைக் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்துத் தகவலறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.