தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணை கரண்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

சென்னை: வாக்குவாதத்தில் பெண் நண்பரை கரண்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

By

Published : Apr 27, 2020, 11:15 AM IST

Updated : Apr 27, 2020, 10:39 PM IST

Man arrested for threatening to kill woman
Man arrested for threatening to kill woman

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் துறைக்கு மும்பையிலிருந்து ஒரு நபர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவர், சென்னையிலிருக்கும் தன் மகளை ரயன் அகர்வால் என்ற இளைஞர் ஒருவர் அடித்து துன்புறுத்துவதாகவும், அவரிடமிருந்து தன் மகளைக் காப்பாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்ற ஆண்டு மும்பையிலிருந்து வந்த தன் மகளுக்கு சென்னையில் தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இப்புகாரின் அடிப்படையில் வேப்பேரி காவல் துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து, ஆயுதத்தைக் கொண்டு தாக்கல், கொலை மிரட்டல் விடுத்தல், காயம் ஏற்படுத்துதல், பெண்ணை துன்புறுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரித்ததில், அப்பெண் வேப்பேரி ரித்தர்டன் சாலையிலுள்ள தனியார் வசித்துவருவதாகவும், அப்பெண்ணுடன் ரயன் அகர்வால் நட்பாகப் பழகிவந்ததாகவும் தெரியவந்தது.

மேலும் இம்மாதம் 25ஆம் தேதி அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அகர்வாலுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த அவர் அப்பெண்ணை கரண்டியால் தாக்கியதாகவும் அறிய வருகிறது.

Last Updated : Apr 27, 2020, 10:39 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details