தமிழ்நாடு

tamil nadu

நள்ளிரவில் பெண்கள் விடுதியில் புகுந்த கஞ்சா போதை ஆசாமி

By

Published : Sep 26, 2022, 7:31 PM IST

பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா போதையில் விடுதியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
கஞ்சா போதையில் விடுதியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சென்னை:கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் நேற்றிரவு புகுந்த இளைஞர் ஒருவர் உறங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் மாணவிகள் கூச்சலிடவே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பின் 2 மணி நேரம் கழித்து மீண்டும் அதே பெண்கள் விடுதிக்குள் நுழைந்துள்ளார்.

இந்த முறை அந்த பெண்கள் இளைஞரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் இளைஞர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(22) என்பதும், இவர் எம்.எம்.சி கல்லூரியில் அனஸ்தீஸியா கிரிட்டிகல் கேர் டிப்ளமோ படிப்பை 2021ஆம் ஆண்டு முடித்திருப்பதும் தெரியவந்தது.

தற்போது, ஸ்ரீகாந்த் சேத்துப்பட்டு நவரோஜி சாலையில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக கஞ்சா போதையில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பித்தபோது தனது செல்போனை அங்கேயே தவறவிட்டுள்ளார். அதன்பின் அந்த போனை எடுக்க மீண்டும் சென்றபோது மாட்டிக்கொண்டார் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: பண்டிகை விடுமுறைகளால் சென்னையில் அதிரடியாக உயர்ந்த விமான கட்டணம்

ABOUT THE AUTHOR

...view details