சென்னை:கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் நேற்றிரவு புகுந்த இளைஞர் ஒருவர் உறங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் மாணவிகள் கூச்சலிடவே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பின் 2 மணி நேரம் கழித்து மீண்டும் அதே பெண்கள் விடுதிக்குள் நுழைந்துள்ளார்.
இந்த முறை அந்த பெண்கள் இளைஞரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் இளைஞர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(22) என்பதும், இவர் எம்.எம்.சி கல்லூரியில் அனஸ்தீஸியா கிரிட்டிகல் கேர் டிப்ளமோ படிப்பை 2021ஆம் ஆண்டு முடித்திருப்பதும் தெரியவந்தது.