தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பர்னிச்சர் கடை பெண்களுக்கு பாலியல் தொல்லை... உரிமையாளர் கைது... - மகளிர் போலீசார்

சென்னையில் பர்னிச்சர் கடை உரிமையாளர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

By

Published : Nov 5, 2022, 8:51 PM IST

சென்னை: தாம்பரத்தை சேர்ந்த அருண் குமார்(29) என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் விற்பனையாளராகபணிபுரிந்துவந்தார். அவருக்கு அருண் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு, தன்னுடன் தனிமையில் இருந்தால் உனக்கு தேவையானதை செய்வேன். இல்லை என்றால் உன் குடும்பத்தை அழித்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனிடையே கடையில் வேலை செய்யும் மற்றப் பெண்களிடமும் அருண் குமார் இதுபோன்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தீபாவுக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் சேலையூர் மகளிர் காவல் நிலையத்தில் அருண் மீது புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் அருண் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்கள் 87 பேர் ஐஐடியில் படிக்க தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ABOUT THE AUTHOR

...view details