தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 24, 2020, 10:27 AM IST

ETV Bharat / state

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

bomb threat
bomb threat

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு அலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்போவதாகக் கூறி மிரட்டியுள்ளார். தனது பெயர் பாட்ஷா எனவும், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 8ஆவது மாடியிலிருந்து பேசுவதாகவும் தெரிவித்து இணைப்பை துண்டித்துள்ளார்.

இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள், முதலமைச்சர் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் போலி என தெரியவந்தது. இதையடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த செல்போன் எண் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம் நகர் தெருவில் இருந்து வந்தது கண்டறியப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற மடிப்பாக்கம் காவலர்கள், அலைபேசி மூலம் மிரட்டியவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அவரது பெயர் சிக்கந்தர் பாஷா(41) என்பதும் எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிப்புரிந்து வருவதும் தெரியவந்தது. இவருக்கு 2 மனைவிகள் இருக்கும் நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட மாத்திரைகள் உட்கொண்டு வருவதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும், இவர், ஏற்கெனவே முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்புக்கு தனி மருத்துவமனை - சந்தீப் நந்தூரி

ABOUT THE AUTHOR

...view details