சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (49). இவர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவாகியது. இதையடுத்து காவல் துறையினர் ஶ்ரீநிவாஸை கைது செய்வதற்காக தேடி வந்தனர். ஆனால், அவர் காவல் துறையினரிடம் இருந்து தப்பி இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் ஶ்ரீநிவாஸ் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இருக்கிறார் என்ற தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து ஹைதராபாத் காவல் துறையினர், ஶ்ரீநிவாஸை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி போட்டு வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (செப்.28) சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலையம் குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து பயணிகளை விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.