தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2019, 9:58 PM IST

ETV Bharat / state

கிஷ்கிந்தா சாலையில் ஆண் உடல் கண்டெடுப்பு!

சென்னை : கிஷ்கிந்தா செல்லும் சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

male_death_new
male_death_new

பெருங்களத்தூரிலிருந்து கிஷ்கிந்தா செல்லும் சாலையான அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் பீர்க்கன்காரணை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிஷ்கிந்தா சாலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

இச்சம்பவம் குறித்து பீர்கங்கரணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

நோயாளிக்கு பாலியல் தொல்லை - சித்த மருத்துவர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details