பெருங்களத்தூரிலிருந்து கிஷ்கிந்தா செல்லும் சாலையான அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் பீர்க்கன்காரணை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.