தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின பேராசிரியர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை - உண்மை அறியும் குழு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை பல்கலைக்கழக 3 பட்டியலின பேராசிரியர்கள் மீதான குற்றசாட்டில் உண்மை இல்லை என, பல்கலையில் ஆய்வு மேற்கொண்ட உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.

பட்டியலினம் என்பதால் பேராசிரியர் பழி வாங்கப்பட்டாரா? என கேள்வி
பட்டியலினம் என்பதால் பேராசிரியர் பழி வாங்கப்பட்டாரா? என கேள்வி

By

Published : Apr 16, 2021, 10:46 PM IST

சென்னை பல்கலைக்கழகத்தின் ஆசிய வரலாறு, தொல்லியல் துறையில் மூன்று பட்டியலின பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை பழிவாங்கும் வகையில் மாணவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்டியலின அமைப்பைச் சேர்ந்த லட்சுமணன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசிய லட்சுமணன், "தொல்லியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் சௌந்தர் ராஜனுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என்பதற்காக மாணவர்கள் மூலம் பிரச்னைகள் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.

பட்டியலினம் என்பதால் பேராசிரியர் பழி வாங்கப்பட்டாரா? என கேள்வி

உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியதில் பேராசிரியர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையில்லை.

பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டும் உண்மை இல்லை.

எனவே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பட்டியலினம் என்றால் ஆபாசமாகப் பேசுவதா -பொது மக்கள் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details